சிலுவை மரமே நீ சொல்
தேவன் உடல் எங்கே
உலவும் காற்றே நீ சொல்
இயேசுவின் குரல் எங்கே
தாய் போல் எம்மை சேர்த்து
தழுவும் கரம் எங்கே
கிளையை பிரிந்து பூவாய்
உதிர்ந்தோம் நாம் இங்கே
காற்றே எங்கள் சோகம்
சொல்வாய் நீ அங்கே
எங்கள் பாரம் வாங்க
இங்கே ஆளில்லை
சோகம் சொல்லி தாங்க
இங்கே தோள் இல்லை
எங்கள் பாவம் தாங்க
உம்போல் தாயில்லை
உம்மை நாங்கள் தேவா
சொல்லவும் வாயில்லை
உம்மை பிரிந்த பின்னால்
இங்கே வாழ்வில்லை
பாலைவனத்தில் மீனாய்
நாங்கள் காய்கின்றோம்
மேய்ப்பன் இல்லை நாங்கள்
முல்லை மேய்கின்றோம்
நாளை பொழுதை எண்ணி
நாளை கழிக்கின்றோம்
தேவன் வருவார் என்றே
தேகம் சுமக்கின்றோம்
தாயாய் வருவார் என்றே தவங்கள் இருக்கின்றோம்
Siluvai Marame Nee Sol lyrics songs, Siluvai Marame Nee Sol song lyrics, Siluvai Marame Nee Sol Lyrics Song Chords PPT -சிலுவை மரமே நீ சொல் , tamil christian songs lyrics
TRUE
TRUE