சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார் - 2
நம் மீறுதலால் இயேசு காயப்பட்டார்
நம் அக்கிரமத்தால் அவர் நொறுக்கப்பட்டார் - 2
1
பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்றறியாரே* - 2
என்றவர் கதறல் ஓசையில்
மன்னிப்பின் தொனி ஒலிக்கின்றதே - 2
சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார்
2
இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்* என்றாரே - 2
இரட்சிப்பின் குரல் கேட்குதே
இரட்சகரை இன்றே சேர்ந்திடுவோம் - 2
3
ஸ்திரீயே அதோ உன் மகன் அதோ உன் தாய்* என்ற நல் நேசரவர் - 2
பொங்கிடும் அன்பு பார்வையுடன்
பொறுப்பினை தந்து தொங்குகின்றார் -
4
தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்*
என்றவர் கதறுகிறார் - 2
அங்கம் சிதைந்த ஆண்டவர்
அங்கலாய்ப்பின் ஓசை எழுப்புகின்றார் - 2
5
தாகம் தீர்க்கும் கன்மலையவர்
இன்று தாகமாயிருக்கிறேன் என்றார் -
ஆத்தும தாகம் கொண்டவர்
தவிப்புடன் நம்மை அழைக்கிறாரே - 2
6
தந்தையின் சித்தமே செய்து முடிக்க
மண்ணில் வந்தவர் அனைத்தும் செய்து முடித்தார் - 2
முடிந்தது என்ற வார்த்தையில்
முழுமையாய் அவர் வெற்றி சிறந்தார் - 2
7
பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்* என்றே - 2
ஜீவன் தந்த இயேசுவின்
அர்ப்பணிப்பின் சத்தம் அழைக்கின்றதே - 2
சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார் - 2
நம் மீறுதலால் இயேசு காயப்பட்டார்
நம் அக்கிரமத்தால் அவர் நொறுக்கப்பட்டார் - 2
Transcript
Siluvai Maraththil lyrics songs, Siluvai Maraththil song lyrics, Siluvai Maraththil Lyrics Song Chords PPT - சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு
true
true