ஸ்தோத்திர கீதம் பாடி
நாமும் உயர்த்துவோம்
கர்த்தரின் கிருபை பெரியதே
அவரின் செயல்கள் மகத்துவம்
அவர் நீதி நித்தியம்
யேகோவா ஷம்மா இருக்கின்றீர்
யேகோவா ஷாலோம் சமாதானம்
யேகோவா யீரே காண்கிறீர்
யேகோவா ராஃபா சுகம் தந்தீர்
1. அகிலம் படைத்தவர் ஆட்சி செய்பவர்
அற்புத நாயகர்
எரிகோ கோட்டையை தகர்க்க வல்ல
நம் துதிக்குப் பாத்திரர்
மரணத்தின் கூரை முறித்தவர்
ஜெய கிறிஸ்துவாக உயிர்த்தவர் -2
2.கருணையின் கடலே அன்பின் வடிவமே
ஐயனே போற்றுவோம்
பிதாவே என்று உம்மை நான் அழைத்திட
உரிமை தந்தீரே
சேனையின் அதிபன் நம்மை
அழைக்கிறார்-ஒன்றாய் இணைவோம்
உழைப்போம் செயல் வீரராய் -2
3. சத்தியம் தவறாத வல்ல தேவனின்
நாமத்தை பாடுவோம்
சிவந்த சமுத்திரம் பிளந்து காத்த
நம் கர்த்தரை பாடுவோம்
கரங்களைத் தட்டியே பாடுவோம்
நன்றாய் கின்னரங்கள்
மீட்டி போற்றிடுவோம்
Sthoathira Keetham paadi lyrics songs, Sthoathira Keetham paadi song lyrics ,Sthoathira Keetham paadi Lyrics Song Chords PPT - ஸ்தோத்திர கீதம் பாடி
true
true