துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தூயாதி தூயரே
உம்மை துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம்
நீர் ஒருவரே பாத்திரர் (2)
உம்மை பாடி போற்றுவோம்
உந்தன் நாமம் உயர்த்துவோம்
உமக்கே துதிகளில் செலுத்துகிறோம்
உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம் (2)
1. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள்
ஏராளம் ஏராளம்
அதை எண்ணி நான் உம்மை துதித்திட
நாட்கள் போதாதே (2)
நீர் செய்த நன்மை நினைக்கின்றேன்
என் உள்ளம் நிறைந்து துதிக்கின்றேன் (2)
2. என் மீது நீர் கொண்ட அன்பினை
சிலுவையில் அறிந்தேன்
எனக்காய் நீர் பட்ட அடிகளில்
உம் நேசத்தை உணர்ந்தேன் (2)
சிலுவை நோக்கி பார்க்கின்றேன்
நன்மை நினைத்து துதிக்கின்றேன் (2)
3. சோர்ந்து போன வேளைகளில்
புதிய பெலன் தந்தீர்
வறண்டு போன எந்தன் வாழ்க்கையில்
உம் ஜீவனை தந்தீர் (2)
பாதம் வீழ்ந்து பணிகின்றேன்
என் வாழ்வை உமக்கு தருகின்றேன் (2)
Thuthigalil Vaasam Seiyum lyrics songs, Thuthigalil Vaasam Seiyum song lyrics, Thuthigalil Vaasam Seiyum Lyrics Song Chords PPT -துதிகளில் வாசம் செய்யும்
TRUE
TRUE