உம்மைத் தேடித் தேடி
அலைந்திருந்தேனே இயேசுவே -2
உம்மை பார்த்த போது கலங்கி
நின்றேனே சிலுவையில்-2
தாவீதின் குலத்தில் மகனாய் பிறந்து
பன்னிரண்டு வயதில் வேதம் மொழிந்தீர்
தாய் மொழி கேட்டு முப்பதாம் வயதில்
தண்ணீரை அன்று ரசமாக்கினீர்
பரம பிதாவே எங்களை காக்க
மகனையே அனுப்பினீர்
உம் கருணையால் காத்து விட்டீர்
. ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேர்
பகிர்ந்து உண்ண செய்த புதுமை என்ன
உயிரிழந்த செல்வன் லாசருவை அன்று
உயிர்ப்பித்த புதுமை என்னவென்பேன்
தெய்வ மகனே நீர் கொண்ட பாடுகள்
என் பாவத்தில் வந்த வேதனையே
அருட்பெருஞ் செல்வனே
நீர் கொண்ட முறிவுகள்
என் கண்ணில் இன்றும் நிற்கின்றன
Ummai Thedi Thedi lyrics songs, Ummai Thedi Thedi song lyrics,Ummai Thedi Thedi Lyrics Song Chords PPT - உம்மைத் தேடித் தேடி
TRUE
TRUE