உந்தன் பாதம் சரணடைந்தேன்
என்னை ஏற்றுக் கொள்ளும் தேவா (2)
கருணை தனை உருவாகவே
கொண்ட இயேசு மகா ராஜனே
1. பொருள் தேடி அலைந்த காலங்களில்
மெய்ப்பொருள் உம்மை மறந்து போனேன்
அருள் வேண்டும் எந்தன் பிரார்த்தனையை
கேட்டு பதில் தாரும் என் இயேசுவே
ஒளியான நாதா ஒளி வீசச் செய்யும்
எளிதான என் ஜெப வேண்டுதலில்
2. ஆவியின் வரங்கள் வேண்டுகிறேன்
குறைவான எந்தன் வாழ்க்கையிலே
பூமியின் வரங்கள் வேண்டாமையா
நிலையற்ற இந்த ஜீவியத்தில்
ஆத்மாவில் வாரும் ஆத்மாவைத் தாரும்
வருகை வரும் அந்த நாள் வரைக்கும்
Unthan Paadham Saranadainthen lyrics songs, Unthan Paadham Saranadainthen song lyrics, Unthan Paadham Saranadainthen Lyrics Song Chords PPT - உந்தன் பாதம் சரணடைந்தேன்
TRUE
TRUE