யாரெல்லாம் மறந்தாலும்
மறக்காத அன்பர் என் இயேசு
யாரெல்லாம் அகன்றாலும்
பிரியாத சிநேகிதர் இயேசு-2
இந்த நல்ல சிநேகத்தை
தூரம் தள்ளிடாதே
நடத்திய விதங்கள் மறந்திடாதே-2
மகிழ்விப்பார் அரவணைப்பார்
உள்ளம் கையில் வைத்துக்கொள்வார்-2
-யாரெல்லாம்
1.உலகத்தின் ஆதரவெல்லாம்
நீங்கிப்போய்விடும்-2
துயரத்தின் வேளைகள் வரும்போதும்
வியாகுலங்கள் வாழ்க்கையில் வரும்போதும்
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
தோளில் வைத்து ஏந்திக்கொள்வார்
நல்ல தேவன் உன்னோடு உண்டு-யாரெல்லாம்
2.நாளைய தினத்தைக்குறித்து
கலங்கிட வேண்டாம்-2
நடத்துவேன் என்றவர் நடத்திடுவார்
வாக்கு உரைத்தவர் மாறிடாரே
சிரித்தாலும் உள்ளே விதும்பும்
உன் வேதனை அறிவார்
எத்தனை நல் தேவன் அவர்-யாரெல்லாம்
Yaarellaam Marandhaalum lyrics songs, Yaarellaam Marandhaalum song lyrics, Yaarellaam Marandhaalum Lyrics Song Chords PPT - யாரெல்லாம் மறந்தாலும், tamil christian songs lyrics, Prasanna Bazil, & Sis Gracy Joel.
true
true