Siluvaiyin Maranaththaal Lyrics Song Chords PPT -சிலுவையின் மரணத்தால்

சிலுவையின் மரணத்தால்
எந்தன் தண்டனைகள்
யாவும் நீர் உம்மில் வாங்கி கொண்டீர்
சிந்தியே இரத்தத்தை
கிரயமாக்கினீரே
சொந்தமாய் என்னை வாங்கி கொண்டீர்-2
அற்புதம் ஆச்சர்யம் அன்பரே உந்தனின்
அன்பினை கண்டேனே சிலுவையில்-2
எத்தன் என்னையுமே உத்தமனாக்கிட
உந்தன் சாயலாய் நான் மாறிட-2-சிலுவையின்

1.சிலுவையின் மரத்திலே
தரித்திரரானீரே
செல்வந்தனாக நான் மாறிட-2
நொறுக்கப்பட்டீர் எனக்காய்
காயங்களும் எனக்காய்
தழும்புகளால் சுகம் ஆனேனே-2-சிலுவையின்

2.வழி தப்பி போனேன் நான்
தேடியே வந்தீர் நீர்
தூரமாய் போயும் கண்டுகொண்டீர்-2
கர்த்தாவே உந்தனின்
அன்பினை வர்ணிக்க
ஆயிரம் நாவுகள் போதுமோ-2-சிலுவையின்

Siluvaiyin Maranaththaal lyrics songs, Siluvaiyin Maranaththaal song lyrics, Siluvaiyin Maranaththaal Lyrics Song Chords PPT - சிலுவையின் மரணத்தால்,Solomon Robert

Download PPT

true

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create