துதிகளின் பாத்திரர் துதிப்பதற்கேற்றவர்
தூயவர் இயேசுவே உம் புகழ் பாட
பா துயர் ஓட ஓடஉம் பாதம் பணிந்திடுவேன்
உம்மை பணிந்தே தொழுதிடுவேன்
மகிமை மாட்சிமை அனைத்தையுமே
நான் உமக்கே செலுத்திடுவேன்
1- துதிகளில் வசித்திடும்
தூயதேவன் பெரியவரே
துதிப்பதால் கிடைத்திடுமே
புதிய கிருபை புது பெலனே
உடைந்துபோன மண்பாத்திரம் போல
நொறுங்கியே கிடக்கிறேன் நான்
குயவனைப் போல எனை எடுத்து
உருவாக்கும் தேவன் நீர்
சத்தியமாய் உம்மை மறப்பதில்லை
நித்தியத்தில் சேர்க்கும் வரை
துதியின் மாலையை உமக்கு சாற்றியே
உம் பாதம் பணிந்திடுவேன்
உம்மை பணிந்தே தொழுதிடுவேன்
2 உண்மையுடன் வாஞ்சையாய்
தேவ சமூகத்தை தேடிடுவேன்
உத்தமரே உந்தன் கிருபையால்
புதிய நம்பிக்கை புதுவாழ்வே
காணாமல் போன ஆட்டினை போல்'
வழிதப்பி திரிந்தேனே நான்
பாதை காட்டி பரிவுடனே எனை
தேடி வந்த நல்மேய்ப்பரே
உந்தன் உள்ளே என்றும் வாழ்ந்திடுவேன்
என் உயிருள்ள காலம்வரை
Thuthigalin Paathirar lyrics songs, Thuthigalin Paathirar song lyrics, Thuthigalin Paathirar Lyrics Song Chords PPT -துதிகளின் பாத்திரர் துதிப்பதற்கேற்றவர்
TRUE
TRUE