கொல்லைப் புறத்தில் துடைப்பம் இருக்கிறது| Tamil Christian Message

ஒரு நாள் இரவு நேரத்தில் பீரித்தியின் தாயார் அவளிடம் பீரித்தி, கொல்லைப் புறத்தில் துடைப்பம் இருக்கிறது. எடுத்துக்கொண்டு வா என்றார்கள், எனக்கு இருட்டில் வெளியே போக பயமாக இருக்கிறது அம்மா என்றாள் பீரித்தி. அம்மா கூறினார்கள். இயேசப்பா நம் கூடவே இருக்கிறார் எனவே நீ பயப்படத் தேவையில்லை தைரியமாகப் போய் எடுத்துக்கொண்டு வா. மெதுவாகச் சென்று கொல்லைப்புறக் கதவைத் திறந்த பீரித்தி வீட்டுக்குப் பின்புறமும் இயேசப்பா இருக்கிறாரா அம்மா? உங்களுக்கு உறிதியாகத் தெரியுமா? என்று தாயாரிடம் கோட்டாள் பீரித்தி. நிச்சயமாக அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். நீ பயப்படாமல் போ என்றார்கள். பீரித்தி வெளியே செல்லாமல் கையைமட்டும் நீட்டிக்கொண்டு கேட்டாள். இயேசப்பா நீங்கள் இங்கே இருந்தால் தயவுசெய்து அந்தத் துடைப்பத்தை மட்டும் எடுத்து என் கையில் கொடுத்துவிடுங்கள்

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create