உம்மை யார் என்று சொல்வேன்
எவரேன்று அறிவேன்
எனக்குரிய ஒரே சொத்து நீர்
என்னை நேசிப்பவரும் போஷிப்பவரும்
காப்பாற்றி அணைப்பதும் நீர்-2
உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஆராதனை (2)
1. என்னை மனிதர் கைவிடும் போதும்
ஏமாற்றி விலகிடும் போதும்
உம் கரத்தால் தூக்கியே என்னை
பாட வைத்தவரே -2
2. என் கால்கள் சறுக்கிடும் போதும்
நான் தள்ளாடி நடந்திடும் போதும்
உம் கிருபையால் தாங்கியே என்னை
நிமிரச் செய்தவரே
3. என் எதிர்காலம் மங்கிடும் வேளை
(எல்லாம்) எதிராக நடந்திடும் பாதை
நான் இருக்கிறேன் என்றுரைத்தென்னை
உம் வார்த்தையால் தேற்றினீரே
4. இருள் சூழ்ந்த பாதையில் என்னை
பயம் சூழ்ந்த வேளையில் என்னை
புது பெலனால் நிற்கச் செய்ய
உம் கிருபை போதுமையா
Ummai Yaar Endru Solven lyrics songs, Ummai Yaar Endru Solven song lyrics, Ummai Yaar Endru Solven Lyrics Song Chords PPT - உம்மை யார் என்று சொல்வேன்
Sign in to access this feature Sign Up
TRUE
TRUE
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List